சூலூர் சிறுமி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கார்த்தி, கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை படுக்கையில் கை, கால்களில் மாவுக்கட்டுடன் இருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.