பிப்ரவரி 13-ம் தேதி தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள பழைய டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் மற்றும் டீபாட் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களுடன் வந்தபோது நாசர் பாஷாவை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீச சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, நாசர் பாஷா, அவருக்கு உதவியாக இருந்த பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா மற்றும் முகமது ஹர்சத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்