முன்னதாக பயிற்சியக வளாகத்தில் மத்திய அமைச்சர் அவர்கள் அம்மாவின் பெயரில் ஒரு மரம் எனும் திட்டத்தின் கீழ் தனது தாயின் பெயரில் மரக்கன்று நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்பு, வன பணிக்கான உயர் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள வன உயிரின அருங்காட்சியகத்தினை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். அவரோடு நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.