கோவை: 700 கிலோ புகையிலை பறிமுதல்.. வியாபாரி கைது

கோவை, தெலுங்கு வீதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பிரகாஷ் (29) என்பவர், பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை வாகனச் சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற பிரகாஷை விசாரித்த போலீஸார், அவரது வாகனத்தில் இருந்த 700 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி