காட்டூர்: வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறிய வடமாநில இளைஞர்

கோவையை சேர்ந்த சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அகில்( 20) தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். நேற்று (அக்.,5) மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது மாணவியின் பெற்றோர் வந்ததை அறிந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மாணவியின் பெற்றோர், கோவை காட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அகிலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி