புகாரில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த டிசம்பர் 31 அன்று ஒரு வாடிக்கையாளர் பிரியாணி சாப்பிட்ட பின்னர், உணவில் பூச்சி இருந்ததாக கூறி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உணவகத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். உணவக மேலாளர், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காட்டி, வாடிக்கையாளரே வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் மூலம் உணவகத்தின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவகத்தில் சுகாதாரம் சரியில்லாமல் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.