கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமை |செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். மேலும், ‘குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கத் தொடர்ந்து போராடுவோம்’ என அவர் உறுதியளித்தார். முன்னதாக, முதலமைச்சர் விஜய், சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியிருந்தார்.