இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 13.54% உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்த 194.2 லட்சம் டன்னை விட அதிகமாக, 220.5 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. எனினும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான மொத்த இறக்குமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது சற்று குறைவாகவே உள்ளது.