பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் சமூக ஊடக பேரவை செயற்குழு கூட்டம் இன்று (நவ.23) திண்டிவனத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அவர், "சமூக ஊடக பேரவை என்பது மற்றவர்களை திட்டுவதற்காக இல்லை" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பதிலளிக்கும்போது நம்மை போற்றினாலும், தூற்றினாலும் சரி, நயமாகவும், நாகரிகமாகவும் பதிவிட வேண்டும் என்று கட்சியினருக்கு அவர் வலியுறுத்தினார்.