தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று (மே 27) அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதலமைச்சர், கார் மூலம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றார். இந்தச் சந்திப்பில், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அவர் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: ஏஎன்ஐ