சென்னை: கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.5) திறந்துவைத்தார். முன்னதாக, என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார்.
நன்றி: பாலிமர்