மேட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் இன்று (ஜூன் 12) திறந்து வைக்கப்பட்டது. டெல்டா பாசன வசதிக்காக, 17.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பலன்பெற நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மாலைக்குள் படிப்படியாக நீர் திறப்பு 10,000 கன அடியாக உயரும். தொடர்ந்து முதல்வர் தண்ணீரை மலர்தூவி வரவேற்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், சிவசங்கர், ஏ.வ. வேலு, பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.