முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத சிரமத்தைப் போக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. அரசு சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டத்திற்கு ரூ.30.16 கோடி கூடுதல் செலவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 21.70 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.