கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவ.25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (நவ.25) கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208 கோடி செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் நவீன வசதிகள், சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.