வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன., 16) மரியாதை செலுத்தினார். 
இதைத் தொடர்ந்து அய்யன் வள்ளுவர் அரங்கில் நடைபெறும் "அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்" பங்கேற்று விருதுகள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வீ.மெய்யநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி