பிளஸ் 2வில் தோற்றவர் நீட் தேர்வில் 98% பெற்றது எப்படி?: பாமக

சென்னை: பிளஸ் 2வில் தோற்றவர் நீட் தேர்வில் 98% பெற்றது எப்படி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாத குஜராத் மாணவி, நீட் தேர்வில் 98% மதிப்பெண் எடுத்தது எப்படி எனக் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறமையை பிரதிபலிக்கவில்லை எனவும் குறை கூறியுள்ளார். நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்த அந்த மாணவி, பிளஸ் 2 மறுதேர்விலும் தோல்வி அடைந்தது, குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி