கமல்ஹாசன் தனது சமூகவலைதளப்பக்கத்தில். விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம். மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும். பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், 'ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.