சென்னை: விருகம்பாக்கத்தில் ஏடிஎம் மையக் காவலாளி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இங்கு பணம் எடுக்க விலையுயர்ந்த பைக்கில் வந்த இரண்டு பேர், பைக்கை ஏடிஎம் வாசலில் நிறுத்திவிட்டு பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த காவலாளி பைக்கை ஓரமாக நிறுத்தச் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் காவலாளியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளன.