நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு.. தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணன் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான இ.சி.ஆர். சரவணன், ஆதரவாளர்களுடன் அஜித்தின் இல்லத்திற்குச் சென்று மலர் வளையத்துடன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த மோகினி மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அஜித்தின் இல்லத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி