தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், உடனே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து பாபுவின் பேச்சை நம்பி எனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தேன். இந்த வகையில13.20 கோடியை பாபுவிடம் மயிலாப்பூர் அலுவலகத்தில் வைத்து பல தவணைகளாக கொடுத்தேன். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ வேலுவிடம் விளக்கம் கேட்டோம். "கட்சிக்காரர்களுடன் பாபு அலுவலகத்துக்கு வருவார். அவர் குறித்த தகவலைக் கேள்விப்பட்டதும் அலுவலகத்துக்கே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்