சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. 252 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறை விமானிகள் உரிய நேரத்தில் கண்டறிந்தனர். பின்னர், விமானத்தின் எந்திரம் சரிசெய்யப்பட்ட பிறகு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றது.