சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 30 வயது அழகு நிலைய பெண் ஊழியர், வடபழனியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் மீது காதல் மற்றும் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக அசோக்நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காதலித்து வந்த நிலையில், இளம்பெண் கர்ப்பமானதும் திருமணம் செய்ய அனந்தகிருஷ்ணன் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.