சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சீமான் போராட்டம் நடத்த வந்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

மனுவில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக நபர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்ததால் அனுமதி மறுப்பு என போலீசார் தெரிவித்தனர். மேலும் புத்தாண்டு தினத்திற்கு அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்படுவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். இதேபோல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர், இளைஞர் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி