இதில், 7 பேர் கொண்ட குழுவினர், கான்கிரீட் பாதை அமைக்க போடப்பட்ட தடுப்பு பலகைகளை, 50 டன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். நள்ளிரவில், டிரைவர் கிரேனை இயக்கியபோது, அதன் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கிரேன் மீது பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக டிரைவர், கீழே குதித்து தப்பினார். பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால், தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மேடவாக்கம் மெயின் ரோட்டில் போக்குவரத்தை தடை செய்தனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு