இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், மலேசியா நாட்டு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும் ரகசிய அறைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை உடைத்துப் பார்த்தபோது, தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ எடை உடைய தங்க கட்டிகள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 2. 1 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி