பபாசி சார்பில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு பொற்கிழி விருதுகள் வழங்கும் விழா புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர், பேரா. அருணன் (உரைநடை), எழுத்தாளர்கள் சுரேஷ்குமார் இந்திரஜித் (நாவல்), என். ராம் (சிறுகதை), கவிஞர் நெல்லை ஜெயந்தா (கவிதை), கலை ராணி (நாடகம்), நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) என 6 பேருக்கும் 2025ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுடன், தலா ரூ. 1 லட்சம் வழங்கினார்.
இதுதவிர பபாசி சார்பில் பதிப்பகச் செம்மல் விருது, சிறந்த நூலகர் விருது, சிறந்த சிறுவர் அறிவியல் நூல் உட்பட சிறப்பு விருதுகளை 9 பேருக்கு அவர் வழங்கி கவுரவித்தார்.