தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், போலீஸ் நிர்வாக டிஜிபி வெங்கடராமனை குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பிரவீன் குமார் அபினபு, குற்றத் தடுப்பு பிரிவு ஐஜியாக சரவண சுந்தர், சிங்கப்பெண் அதிரடிப் படை ஐஜியாக பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றப்பட்டுள்ளனர்.