இதற்காக மத்திய அரசு நிர்ணயித்த ரூ. 22.46 லட்சத்தையும் அதிமுக செலுத்தி இருந்தது. இந்த இடத்தில் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில், வரும் 10ம் தேதி திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, காணொலி வாயிலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து திறந்து வைக்க உள்ளார். தற்போது அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், மற்ற நிர்வாகிகளும், முன்னாள் எம்.பி.க்களும் டெல்லி புறப்பட்டு சென்று விழாவில் பங்கேற்கின்றனர். இந்த கட்டிடத்தில் கூட்ட அரங்கம், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரிய படங்கள் கொண்ட காட்சி அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!