இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வருமான உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்புக்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் வாடகையில் வசூலிக்கப்படும் தொகையில் இருந்து 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அவர்களின் வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்துபவராக இருந்தால், அவர்களிடம் இருந்து வரி தொகையை வசூலித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாடகைதாரர்களும் ஜிஎஸ்டியின் உள்ளீட்டு வரிச் சலுகை மூலம் வாடகை வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
வாடகைதாரர்களான வணிகர்களுக்கு முற்றிலும் பாதிப்பில்லை. இதனை தெளிவுபடுத்த திமுக அரசு மறுக்கிறது. மத்திய அரசு மீது பழிபோடும் மலிவான அரசியலை செய்கின்றனர். இது தொடர்பாக மாநில வணிகவரித்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.