சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கும் பரவியது. இதில், பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்தன. மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தீயினால் ஏற்பட்ட கரும்புகை வானம் வரை பரவியது. இதனால், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.