ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்துகொண்டிருக்கிறது திமுக. திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்து, கடந்த 07.05.2021 முதல், 31.12.2023 வரை, ரூ.35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். எனவே, இதற்காக ஒரு குழுவை உடனடியாக அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, 4 ஆண்டுகளாக ஏமாந்துகொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது