சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 7 பேரை கைது செய்தனர். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்ததால் இளைஞர் ஜீவ ரத்தினம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜீவ ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதல் தொடர்பாக அப்பு, ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.