சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

சென்னை தியாகராயநகரில் உள்ள மங்கள வில்லா அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3-வது தளத்தில் சிக்கிய 6 பேர் ஸ்கை லிப்ட் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த வயதான தம்பதியினர் இரும்பு கேட்டை உடைத்து மீட்கப்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி