சென்னை: வணிக வளாகத்துடன் மந்தைவெளி பேருந்து முனையம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தை ரூ. 151 கோடி மதிப்பில் (ஜிஎஸ்டி மற்றும் தற்காலிகத் தொகை உட்பட) வெளியிட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-இல் சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக, இந்த நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில், மெட்ரோ இரயில் நிலைய நுழைவு/வெளியேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து வளர்ச்சி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29,385 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு கட்டிடங்கள் அமையவுள்ளன. இரண்டு கட்டிடங்களின் மாடியிலும் சூரிய மின்கல அமைப்புகள் (solar panels) அமைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி