இதைத் தொடர்ந்து அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். அதேபோல் உடனடியாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ராமாபுரம், விருகம்பாக்கம், கோயம்பேடு, தி நகர், ஜெ. ஜெ நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்கள் உட்பட 15 வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பழைய பொருட்கள் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டில் மெத்தைகள், மற்றும் கார் ஷெட்டில் இருந்த ஒரு காரும் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து ராமாபுரம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு