தமிழகத்தில் பரவலாக கனமழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை நீடித்து வருகிறது. சென்னையில் மாலை வேளையில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். இதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி