இதையொட்டி, காவலர்களின் கட்டணமில்லா பயணம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. இதன்படிப்படை கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும்.
இந்த பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளாகவும், கால அளவுக்கும் மட்டுமே செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்கலாம். பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, வாரண்ட் பெற வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.