வளசரவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் உல்லாஸ் (59), உடல்நலக் குறைவால் 15 நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று, அவர் தனது படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.