சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனசேகர் (28) என்பவர் பெண்ணை இடித்தாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட பெண்ணை தனசேகர் அருவருப்பான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் தனசேகரை போலீசார் கைது செய்துள்ளனர்.