அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், பல்கலைக்கழக மைய இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட 17 பேர் மீதும், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 2023-24 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 224 கல்லூரிகளில் இந்த முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.