சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், நேற்று இரவு அதிரடியாக 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இவர்களில் 12 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிரா, கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லி ஆகியோர் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.கே.பி. நகர், ஆர்.கே. நகர், ஐகோர்ட், கோட்டூர்புரம், அயனாவரம், நீலாங்கரை, ராஜமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக ரோகிணி பொறுப்பேற்கிறார். இது தவிர, 14 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.