சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது சரிவாகும். அதிகபட்சமாக நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ சேவையை பயன்படுத்தியுள்ளனர். பயண அட்டையை 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பேரும், சிங்கார சென்னை அட்டையை 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.