சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று (பிப்ரவரி 25) காலை 7.20 மணிக்கு புறப்படவிருந்தது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தும், விமானம் பல மணிநேரமாக ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டது. விமானம் புறப்படாததற்கான காரணம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. விமானத்தில் ஏசி நிறுத்தப்பட்டதுடன், பயணிகளை இறங்கவும் அனுமதிக்கவில்லை. உணவு உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.