சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் ஆனந்தகுமார், ரூ. 2 லட்சம் கேட்டு மர்ம நபர்களால் ஆட்டோவில் கடத்தப்பட்டார். அவரது நண்பரின் புகாரைத் தொடர்ந்து, கொத்தால்சாவடி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, எண்ணுார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைக் கண்டறிந்து, கடத்தலில் ஈடுபட்ட தனசேகர், ராஜாராம், ஏசுதாஸ் ஆகியோரை கைது செய்தனர். ஆனந்தகுமார் மீட்கப்பட்டார். தனசேகர் மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.