சென்னை: பேசின் பிரிட்ஜ் பகுதியில் சிறுவன் ஓட்டிய வந்த கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுவன் தாறுமாறாக ஓட்டிய வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த காரின் உள்ளே இருந்த 5 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.