சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா (19) நேற்று அளித்த புகார் மனுவில், 'ஜெஸ்ஸி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆபிரகாம் ஜோஸ்வா தன்னை காதலிப்பதாகக் கூறி, அப்போது தனக்கு 17 வயது என்பதால் மறுத்தபோதும், ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாகவும், இதனால் இருமுறை கருக்கலைப்பு செய்ய நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார்.