சென்னை காவல் ஆணையர் அமல் ராஜ், சென்னையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள், ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.