மேலும், சவுக்கு சங்கரின் தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவம் நடைபெற்ற அன்றே உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விஜய், கல்யாண் குமார், செல்வா மற்றும் தேவி, பாரதி என 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?