தியாகராயநகரில் வெள்ளி இரவு பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்து ரூ. 23.5 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர தொழிலதிபர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வருமானவரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.