இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் செல்போன் நம்பரை தொடர்புகொண்டு அவரிடம் பேசி காவல்நிலையம் வரவழைத்து விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு சிவராஜபுரத்தை சேர்ந்த விஷால் (21) என்பவரை சிறுமி காதலித்துள்ளார்.
இதனால் அவரை திருமணம் செய்துகொண்டதும் தெரிந்தது. இதையடுத்து வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். கவுன்சிலிங் வழங்கி சிறுமியை பெற்றோருடன் ஒப்படைத்தனர். இதனிடையே சிறுமியை திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் விஷாலை கைது செய்தனர்.